இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தில்லி எல்லையில் 50,000 காவலர்கள், ராணுவத்தினர் குவிப்பு

விவசாயிகள் சாலைமறியலையொட்டி தில்லி எல்லைகளில் 50 ஆயிரம் காவலர்கள், ராணுவத்தினர், மத்திய பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

News image
தில்லி காவலர்களும், விவசாய போராட்டத்தில் பெற்றோருடன் செல்லும் சிறுமியும்
Updated On :6 பிப்ரவரி 2021, 5:17 am

DIN

விவசாயிகள் சாலைமறியலையொட்டி தில்லி எல்லைகளில் 50 ஆயிரம் காவலர்கள், ராணுவத்தினர், மத்திய பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் தில்லியிலுள்ள 12 மெட்ரோ நிலையங்களில் நுழைவு வாயில் மற்றும் வெளியேறும் வாயில்கள் மூடப்பட்டு அதிக அளவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் 'சக்கா ஜாம்' என்ற பெயரில் சாலை மறியல் போராட்டத்தில் இன்று (பிப்.6) ஈடுபடவுள்ளதாக விவசாயிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன.

நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே நடைபெறவுள்ள இந்தப் போராட்டம் தலைநகா் தில்லி தவிர்த்து நாட்டின் பிற பகுதிகளில் நடைபெறும் என்றும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

எனினும் டிராக்டர் பேரணியின்போது ஏற்பட்ட மோதல்களைப் போன்று விவசாயிகள் சாலைமறியலில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

விவசாயிகள் சாலைமறியலின்போது சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் நாடாளுமன்ற பாதுகாப்பு குழுவினரும் தில்லி சாலைகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.