காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

தில்லியில் 10 மெட்ரோ ரயில் நிலைய நுழைவாயில்கள் திறக்கப்பட்டன

விவசாயிகளுக்கு ஆதரவாக சக்கா ஜாம் என்ற பெயரில் அறிவிக்கப்பட்ட சாலை மறியல் போராட்டம் காரணமாக தில்லியில் மூடப்பட்டிருந்த 10 மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவாயில்கள் திறக்கப்பட்டன.

News image
தில்லியில் 10 மெட்ரோ ரயில் நிலைய நுழைவாயில்கள் திறக்கப்பட்டன
Updated On :6 பிப்ரவரி 2021, 12:10 pm

PTI


விவசாயிகளுக்கு ஆதரவாக சக்கா ஜாம் என்ற பெயரில் அறிவிக்கப்பட்ட சாலை மறியல் போராட்டம் காரணமாக தில்லியில் மூடப்பட்டிருந்த 10 மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவாயில்கள் திறக்கப்பட்டன.

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், நாடு முழுவதும் விவசாய சங்கங்கள் சார்பில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தில்லியில் மாண்டி ஹவுஸ் உள்ளிட்ட 10 மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவாயில்கள் காலை முதலே மூடப்பட்டிருந்தன.

இன்று நண்பகல் 12 மணிக்குத் தொடங்கிய சாலை மறியல் போராட்டம் 3 மணிக்கு நிறைவடைந்ததை அடுத்து, மூடப்பட்டிருந்த மெட்ரோ ரயில் நிலைய நுழைவாயில்கள் மீண்டும் திறக்கப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.