ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

உத்தரகண்ட் வெள்ளத்தில் பலியானோர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம்: பிரதமர் மோடி

உத்தரகண்ட் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பலியானோர் குடும்பத்திற்கு பிரதமர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

News image
பிரதமா் நரேந்திர மோடி
Updated On :7 பிப்ரவரி 2021, 2:20 pm

DIN

உத்தரகண்ட் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பலியானோர் குடும்பத்திற்கு பிரதமர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

உத்தரகண்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை திடீரென ஏற்பட்ட பனிச்சரிவினால் தவுளிகங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கி 150 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் குடும்பத்திற்கு மத்திய அரசின் சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் பொது நிவாரண நிதியில் இருந்து வெள்ள பாதிப்பினால் பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

அதேபோல் உத்தரகண்ட் மாநில அரசின் சார்பில் ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.