டிராக்டர் பேரணி: கருத்துக் கூறியவர்களை கைது செய்ய இடைக்காலத் தடை

தில்லி டிராக்டர் பேரணி குறித்து தவறான கருத்துகளை பதிவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டோரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
டிராக்டர் பேரணி: கருத்துக் கூறியவர்களை கைது செய்ய இடைக்காலத் தடை
டிராக்டர் பேரணி: கருத்துக் கூறியவர்களை கைது செய்ய இடைக்காலத் தடை

தில்லி டிராக்டர் பேரணி குறித்து தவறான கருத்துகளை பதிவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டோரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

டிராக்டர் பேரணியில் உண்மைக்கு புறம்பான கருத்துகளைப் பரப்பியதாக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் மற்றும் 6 பத்திரிகையாளர்கள் மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஜனவரி 26-ஆம் தேதி புது தில்லியில் டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டது. தில்லியில் குடியரசு நாளன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியில் விவசாயிகளுக்கும் காவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.  இந்த மோதலில் ஒரு விவசாயி உயிரிழந்த நிலையில்,  காவலர்கள் பலர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில் டிராக்டர் பேரணியின்போது உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பியதாக காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் மற்றும் 6 பத்திரிகையாளர்கள் மீது உத்தரப் பிரதேச காவல்துறை சார்பில் தேசதுரோக வழக்கு பதிந்துள்ளது.

சர்தேசாய், ம்ரிநல் பாண்டே, விநோத் கே ஜோஷ், அனந்த் நாத், பரேஷ் நாத் உள்ளிட்ட 6 பத்திரிகையாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இவர்களைக் கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

டிராக்டர் பேரணியின்போது சுட்டுரையின் மூலம் அவர்கள் பதிவிட்ட தகவல்கள் மற்றும் அறிக்கைகள் காவல்துறையினர் மீதும், ராணுவத்தினர் மீதும் கலங்கத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சசி தரூர் உள்ளிட்டவர்கள் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறித்து விளக்கமளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com