ஆந்திரத்தில் 68, கர்நாடகத்தில் 380 பேருக்கு கரோனா தொற்று
ஆந்திரத்தில் புதிதாக 68 பேருக்கும், கர்நாடகத்தில் புதிதாக 380 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரம்: ஆந்திரத்தில் புதிதாக 68 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,88,760 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 814 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாவிலிருந்து இதுவரை 8,80,784 பேர் குணமடைந்துள்ளனர். அதேசமயம் கரோனாவுக்கு இதுவரை 7,162 பேர் பலியாகியுள்ளனர்.
கர்நாடகம்: கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 380 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,44,437ஆக உயர்ந்துள்ளது. கரோனாவுக்கு இன்று மேலும் 8 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 12,259ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 405 குணமடைந்தனர்.
இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 9,26,234ஆக உயர்ந்துள்ளது. 5,925 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.