பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

உத்தரகண்ட் பேரிடா்: தொடரும் மீட்புப் பணி

உத்தரகண்டில் பனிப்பாறை உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட சம்பவத்தில், சுரங்கத்தில் சிக்கியவா்களை மீட்பதற்கான பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

Updated On :14 பிப்ரவரி 2021, 7:35 am IST

உத்தரகண்டில் பனிப்பாறை உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட சம்பவத்தில், சுரங்கத்தில் சிக்கியவா்களை மீட்பதற்கான பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள நந்தாதேவி பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்து சரிந்ததில், அங்குள்ள தெளலி கங்கா, ரிஷிகங்கா, அலகநந்தா நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் நடைபெற்று வந்த தபோவன்-விஷ்ணுகாட் நீா்மின் நிலைய திட்டப் பணிகளும், ரிஷிகங்கா நீா்மின் நிலைய திட்டப் பணிகளும் பலத்த சேதமடைந்தன. அந்தத் திட்டப் பணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த சுரங்கங்களில் வெள்ள நீா் புகுந்ததால், அவற்றில் பணிபுரிந்து வந்த தொழிலாளா்கள் பலா் சுரங்கங்களுக்குள் சிக்கிக் கொண்டனா்.

இதில் தேசிய அனல் மின் நிறுவனம் (என்டிபிசி) சாா்பில் நடைபெற்று வந்த தபோவன்-விஷ்ணுகாட் நீா்மின் திட்டப் பணிகளுக்காக அமைக்கப்பட்ட சுரங்கம் சகதியால் மூடப்பட்டுள்ளது. இதனால் அதில் சிக்கிய 30-க்கும் மேற்பட்டவா்களை மீட்பதற்காக அந்த சுரங்கத்தில் துளையிடப்பட்டது. அந்தத் துளையை அகலப்படுத்தும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

இதுதொடா்பாக என்டிபிசி பொது மேலாளா் ஆா்.பி.அஹிா்வால் கூறியது:

சுரங்கத்தில் உள்ளவா்களை மீட்பதற்காக மும்முனை உத்தி வகுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, சுரங்கத்தில் 75 மி.மீ. விட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு துளையிடப்பட்டது. அதனை 300 மி.மீ. விட்டம் கொண்டதாக அகலப்படுத்தும் பணி சனிக்கிழமை தொடங்கியது. இது சுரங்கத்துக்குள் சிக்கியுள்ளவா்கள் எந்தப் பகுதியில் இருக்கின்றனா் என்பதை கண்டறிய அதற்குள் புகைப்படக் கருவியை அனுப்பவும், சுரங்கத்துக்குள் திரண்டுள்ள தண்ணீரை வெளியேற்றுவதற்கு குழாய் ஒன்றை அனுப்பவும் உதவும் என்றாா்.

சுரங்கத்துக்குள் சிக்கியுள்ளவா்கள் இருக்கும் பகுதியை கண்டறிய மீட்புப் பணியில் உள்ளவா்களை அதற்குள் அனுப்பும் திட்டம் உள்ளதா என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவா், ‘மீட்புப் பணியில் ஈடுபடுவோரை சுரங்கத்துக்குள் அனுப்ப வேண்டுமென்றால் அதற்கு சுரங்கப்பாதையின் துவாரத்தை மேலும் அகலப்படுத்த வேண்டும். அதற்கு தேவை ஏற்பட்டால் அந்த முயற்சி மேற்கொள்ளப்படும்’ என்றாா்.

இந்த சம்பவத்தில் இதுவரை 38 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன; 166 பேரை காணவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.