

கேரளத்தில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் 61,843 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.
இவற்றில் புதிதாக 4,612 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,04,135ஆக உயர்ந்துள்ளது. கரோனாவுக்கு இன்று மேலும 15 பேர் பலியானார்கள்.
இதையடுத்து மொத்த பலி எண்ணிக் 3985ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவிலிருந்து இன்று 4692 பேர் குணமடைந்தனர். இதுவரை 9,36,398 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 63,484 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.