மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பி.பி.சாவந்த் புணேவில் காலமானார்

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பி.பி.சாவந்த் மகாராஷ்டிராவில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பு காரணமாக திங்கள்கிழமை காலை காலமானதாக குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன. 

News image

Supreme Court judge Justice P B Sawant_fb

Updated On :15 பிப்ரவரி 2021, 9:19 am

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பி.பி.சாவந்த் மகாராஷ்டிராவில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பு காரணமாக திங்கள்கிழமை காலை காலமானதாக அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன. 

அவருக்கு வயது 90. புணேவில் டிசம்பர் 31, 2017-இல் நடைபெற்ற எல்கர் பரிஷத் மாநாட்டில் இணை அழைப்பாளர்களில் ஒருவராகப் பங்கேற்றவர். 

2002-ம் ஆண்டு குஜராத் கலவரம் குறித்து விசாரணை நடத்திய குழுவின் ஒரு பகுதியாக இருந்தவர். நீதிபதி சாவந்த் இந்தியப் பத்திரிகைக் குழுவின்(பிடிஐ) தலைவராகவும் பணியாற்றினார். 

மாரடைப்பு காரணமாக திங்கள்கிழமை காலை 9.30 மணியளவில் அவரது இல்லத்தில் உயிரிழந்தார் என்று அவரது மகள் சுஜாதா மானே தெரிவித்தார். அவரது இறுதிச் சடங்குகள் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. 

ஜூன் 30, 1930-இல் பிறந்த நீதிபதி சாவந்த் 1957இல் வழக்குரைஞராகச் சேர்ந்தார். பின்னர், 1973இல் மும்பை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகவும், 1989ஆம் ஆண்டு நீதிபதி சாவந்த் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். 1995இல் அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.