5 ரூபாய்க்கு உணவுத் திட்டம்: மம்தா அறிமுகம்
ஏழைகளுக்கு ரூ. 5-க்கு உணவு வழங்கும் திட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காணொலி வாயிலாக திங்கள்கிழமை தொடங்கிவைத்தார்.


ஏழைகளுக்கு ரூ. 5-க்கு உணவு வழங்கும் திட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காணொலி வாயிலாக திங்கள்கிழமை தொடங்கிவைத்தார்.
இந்த திட்டத்தின்படி 5 ரூபாய்க்கு சாப்பாடு, பருப்பு, காய் மற்றும் முட்டை வழங்கப்படவுள்ளன. இதற்கான மானியமாக மாநில அரசு ஒரு உணவுக்கு ரூ. 15 செலுத்துகிறது.
நாள்தோறும் பிற்பகல் 1 முதல் 3 மணி வரை சுய உதவிக் குழுவினர் சமையலறைகளைப் பராமரிப்பார்கள் என்றும், மாநிலம் முழுவதும் இதற்கான சமையலறைகள் படிப்படியாக அமைக்கப்படும் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் தேர்தல் வரவுள்ள நிலையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...