எந்தத் தடுப்பூசி வேண்டும்? தமிழகத்தில் இனி பயனாளர்களே முடிவு செய்யலாம்

தமிழகத்தில் இனி, பயனாளர்களே தங்களுக்கு எந்தத் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்பதை தேர்வு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எந்தத் தடுப்பூசி வேண்டும்? தமிழகத்தில் இனி பயனாளர்களே முடிவு செய்யலாம்
எந்தத் தடுப்பூசி வேண்டும்? தமிழகத்தில் இனி பயனாளர்களே முடிவு செய்யலாம்
Updated on
1 min read


மதுரை: கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டு ஒரு மாத காலம் பூர்த்தியடையும் நிலையிர், தமிழகத்தில் இனி, பயனாளர்களே தங்களுக்கு எந்தத் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்பதை தேர்வு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை தலைமைச் செயலாளர் ஜே. ராதாகிருஷ்ணன் கூறுகையில், நாட்டில் கோவக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்குமே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு மருந்துகளுமே அனைத்து மாவட்டங்களிலும் போதிய அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கோவாக்சின் மருந்து இருப்பு வைக்கப்படாமல் இருந்தது. யாரேனும் கோவிஷீல்டுக்கு பதிலாக கோவாக்சின் செலுத்திக் கொள்ள விரும்பினால், அவர்கள் வேறு மாவட்டங்களுக்குச் சென்று போட்டுக் கொள்ளும் நிலைமை இருந்தது.

ஆனால் தற்போது முதல் முறையாக பயனாளர்கள் கோவாக்சின் அல்லது கோவிஷீல்டு என எந்தத் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என்பதை அவர்களே தேர்வு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், கடந்த வாரம் வரை தமிழகத்தில் வெறும் 6 கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்களில் மட்டுமே கோவாக்சின் செலுத்தப்பட்டது. ஆனால் தற்போது பல்வேறு மாவட்ட அரசு மருத்துவமனைகளில் இரண்டு மருந்துகளும் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com