பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்குர் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

போபால் தொகுதி பாஜக எம்.பி. பிரக்யா சிங் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்குர் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

போபால் தொகுதி பாஜக எம்.பி. பிரக்யா சிங் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
மத்திய பிரதேச மாநிலம் போபாலிலிருந்து மக்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டவா் பிரக்யா சிங் தாக்குா்(50). இவர் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத்திணறல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
இதனிடையே பிரக்யா சிங் தாக்குரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பிரக்யா சிங் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com