மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

அதிகரிக்கும் கரோனா: கேரள எல்லைகளை மீண்டும் மூடியது கர்நாடகம்

கரோனா வைரஸ் தொற்றும் மீண்டும் சமீபமாக அதிகரித்து வருவதையடுத்து, கேரளத்திலிருந்து வரும் பயணிகளுக்குக் கடுமையான கட்டுப்பாட்டை விதித்துள்ளது கர்நாடக அரசு. 

News image
அதிகரிக்கும் கரோனா: கேரள எல்லைகள் மீண்டும் மூடல் 
Updated On :22 பிப்ரவரி 2021, 9:30 am

PTI

கரோனா வைரஸ் தொற்றும் மீண்டும் சமீபமாக அதிகரித்து வருவதையடுத்து, கேரளத்திலிருந்து வரும் பயணிகளுக்குக் கடுமையான கட்டுப்பாட்டை விதித்துள்ளது கர்நாடக அரசு. 

தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட பல சாலைகளை கர்நாடக அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். கரோனா எதிர்மறை சான்றிதழ்கள் உள்ளவர்களுக்கு மட்டும் எல்லையில் நுழைவதற்கு அனுமதி அளித்துள்ளது. எனவே, எல்லைப்பகுதியில் இன்று காலையிலிருந்து நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றபடியே உள்ளனர். 

திங்கள்கிழமை முதல் நான்கு எல்லைகளுக்கும் சீல் வைத்துள்ளதாக தட்சிண கன்னட அதிகாரிகள் தெரிவித்தன.

இதுதொடர்பாக கர்நாடக அதிகாரிகள் கூறுகையில், 

எல்லையில் நுழைய விரும்புவோர் குறைந்தபட்சம் 72 மணி நேரத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட ஆர்டி-பிசிஆர் சோதனை மூலம் கரோனா எதிர்மறை சான்றிதழை வைத்திருப்பது அவசியம். 

மேலும், நான்கு எல்லைகளிலும் சுகாதார மற்றும் காவல்துறை அதிகாரிகள் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.