தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

புதிய தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்தது: பிகார் அரசு மீது அதிருப்தி

பிகார் முதல்வர் நிதிஷ் குமாரின் முக்கியத் திட்டங்களில் ஒன்றான ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் பாஸ்தி கிராமத்தில் கட்டப்பட்ட புதிய தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்தது.

News image

புதிய தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்தது: பிகார் அரசு மீது அதிருப்தி (கோப்புப் படம்)

Updated On :22 பிப்ரவரி 2021, 10:13 am


பாட்னா: பிகார் முதல்வர் நிதிஷ் குமாரின் முக்கியத் திட்டங்களில் ஒன்றான ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் பாஸ்தி கிராமத்தில் கட்டப்பட்ட புதிய தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்தது.

முதல்வர் நிதிஷ் குமாரின் தொகுதிக்கு உள்பட்ட நலந்தா மாவட்டம் நர்நௌத் பகுதியில் சுமார் 8 மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்ட தண்ணீர் தொட்டி, கட்டப்பட்டபோதே, தரமற்ற கட்டுமானப் பொருள்கள் பயன்படுத்தப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்த நிலையில் இன்று அது இடிந்து விழுந்துள்ளது.

தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்தது குறித்து பொது சுகாதாரம் மற்றும் பொறியியல் துறையின் இளம் பொறியாளர் அபே சிங் கூறுகையில், சில சமூக விரோதிகள் தண்ணீர்தொட்டியின் முக்கிய இணைப்புகளைக் கழற்றிவிட்டதே இடிந்து விழக் காரணம் என்று கூறியுள்ளார்.

அதேவேளையில், ஹர்நௌத் பகுதியில் மட்டும் முதாரி, சிலா மற்றும் அதனையொட்டியுள்ள சில கிராமங்களிலும் கட்டப்பட்ட தண்ணீர் தொட்டிகள் இடிந்து விழுந்ததையும் அபே ஒப்புக் கொண்டுள்ளார்.

முதல்வர் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட தண்ணீர்தொட்டிகள் இப்படி கட்டப்பட்டு சில மாதங்களிலேயே இடிந்து விழுவது குறித்து பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.