தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

3 மாநிலங்களில் 2 வகைகளில் கரோனா: மத்திய அரசு

​கேரளம், மகாராஷ்டிரம் மற்றும் தெலங்கானாவில் 2 வகை கரோனா வைரஸ் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :23 பிப்ரவரி 2021, 1:11 pm


கேரளம், மகாராஷ்டிரம் மற்றும் தெலங்கானாவில் 2 வகை கரோனா வைரஸ் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பாதிப்பு மற்றும் தடுப்பூசி நிலவரம் பற்றிய தகவல்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் செய்தியாளர் சந்திப்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

அப்போது சுகாதாரத் துறை அமைச்சகத்தின் செயலர் ராஜேஷ் பூஷண் கூறியது:

"நாடு முழுவதும் 1.17 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கரோனாவுக்கான சிகிச்சை பெற்று வருவோர் 1.50 லட்சத்துக்கும் குறைவாகவே நீடிக்கிறது. நாள்தோறும் ஏற்படும் உயிரிழப்புகளின் சராசரி 92 ஆக உள்ளது.

கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 5.19 சதவிகிதமாக உள்ளது. இது குறைந்துகொண்டே வருகிறது.

நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருபவர்களில் கேரளம் மற்றும் மகாராஷ்டிரத்தில் மட்டுமே 75 சதவிகிதம் பேர் உள்ளனர். கேரளத்தில் 38 சதவிகிதத்தினர், மகாராஷ்டிரத்தில் 37 சதவிகிதத்தினர், கர்நாடகத்தில் 4 சதவிகிதத்தினர், தமிழகத்தில் 2.78 சதவிகிதத்தினர் உள்ளனர்.

இன்று மதியம் 1 மணி வரை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,17,64,788 ஆக உள்ளது. இதில் 68 சதவிகித சுகாதாரப் பணியாளர்களுக்கு ஒரு முறை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 62 சதவிகித சுகாதாரப் பணியாளர்களுக்கு 2 முறை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 41 சதவிகித முன்களப் பணியாளர்களுக்கு ஒரு முறை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது" என்றார் ராஜேஷ் பூஷண்.

நீதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரத் துறை) வி.கே. பால் கூறியது:

"இதுவரை 187 பேருக்கு பிரிட்டன் வகை கரோனா தொற்றும், 6 பேருக்கு தென் ஆப்பிரிக்க வகை கரோனா தொற்றும், ஒருவருக்கு பிரேசில் வகை கரோனா தொற்றும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் என்440கே மற்றும் இ484கே என இரண்டு வகைகள் இருப்பது பற்றி பேசப்பட்டு வருகிறது. ஆம், மகாராஷ்டிரம், கேரளம் மற்றும் தெலங்கானாவில் இந்த வகைகள் உள்ளன. எங்களிடம் இருக்கும் தகவலின்படி மகாராஷ்டிரம் மற்றும் கேரளத்தின் சில மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகரிப்பதற்கு இந்த வகைகள் கரோனாதான் காரணம் என்று நம்புவதற்கு அறிவியல் அடிப்படையிலான காரணங்கள் எதுவும் இல்லை" என்றார் வி.கே. பால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.