தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

தமிழகம், கேரளம் உள்பட 7 மாநிலங்களில் தினசரி கரோனா பாதிப்பு அதிகரிப்பு

தமிழகம், கேரளம் உள்பட 7 மாநிலங்களில் தினசரி கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :25 பிப்ரவரி 2021, 2:45 pm

தமிழகம், கேரளம் உள்பட 7 மாநிலங்களில் தினசரி கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், நாட்டில் கரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை இன்று 1,51,708-ஐ கடந்தது. இது மொத்த பாதிப்பில் 1.37 சதவீதம்.

மகாராஷ்டிரம், கேரளம், பஞ்சாப், மத்தியப் பிரதேசம், தமிழகம், குஜராத் மற்றும் சத்தீஸ்கரில் தினசரி கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், 16,738 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 89.57 சதவீதம் பேர் 7 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 8,807 பேருக்கும், அடுத்ததாக கேரளத்தில் 4,106 பேருக்கும் புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தினசரி பாதிப்பு அதிகரிப்பதற்கான காரணத்தை கண்டறியவும், மாநில சுகாதார அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு கரோனா தொற்றை கட்டுப்படுத்தவும்,  7 மாநிலங்களுக்கு உயர்நிலை ஒழுங்கு குழுவை மத்திய அரசு அனுப்பியுள்ளது.

மறுபுறம், நாட்டின் ஒட்டு மொத்த கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.  2021 பிப்ரவரி 25ம் தேதி, நிலவரப்படி ஒட்டு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5.17 சதவீதமாக உள்ளது.

நாட்டில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்று  1,07,38,501 ஆக உள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை  97.21 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11,799 பேர் குணமடைந்துள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.