மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மகாராஷ்டிரம்: 10, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு 

மகாராஷ்டிர மாநிலத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு இந்தாண்டு ஏப்ரல் 23 மற்றும் மே 21-ஆம் தேதியில் நடைபெறும் என்று அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது. 

News image

vr24exam_2401chn_184_1

Updated On :27 பிப்ரவரி 2021, 6:15 am

மகாராஷ்டிர மாநிலத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு இந்தாண்டு ஏப்ரல் 23 மற்றும் மே 21-ஆம் தேதியில் நடைபெறும் என்று அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது. 

நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டன. பின்னர் மத்திய அரசு அளித்த தளர்வுகளின் அடிப்படையில் மாநில அரசுகள் படிப்படியாகப் பள்ளிகள் திறப்பை அறிவித்துள்ளது. 

அந்தவகையில், மகாராஷ்டிர மாநிலத்திலும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 12-ம்(எச்.எஸ்.சி) வகுப்புக்கு ஏப்ரல் 23-ல் தொடங்கி மே 21-ஆம் தேதி வரையும், எஸ்.எஸ்.சி தேர்வு ஏப்ரல் 29 முதல் மே 20 வரையும் நடைபெறும் என்று மகாராஷ்டிர மாநில இடைநிலை மற்றும் உயர்நிலை வாரியத்தின் செயலாளர் அசோக் போசலே கூறியுள்ளார். 

பொதுத்தேர்வுகள் வழக்கமாக பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடத்தப்படுகின்றன. ஆனால் இந்தாண்டு கரோனா தொற்றுநோய் காரணமாகத் தேர்வுக்கான அட்டவணை மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.