அமெரிக்காவில் விசா மோசடி! 11 இந்தியர்கள் கைது!
அமெரிக்காவில் விசா மோசடி செய்த 11 இந்தியர்களைக் காவல்துறை செய்தது குறித்து...


அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்து வரும் 11 இந்தியர்கள் விசா மோசடி செய்ததாகக் கூறி அந்நாட்டு காவல்துறை அவர்களை சனிக்கிழமை கைது செய்தது.
வெளிநாட்டில் வழங்கப்படும் ‘யு விசா’ வைப் பெறுவதற்காக இந்தச் சம்பவம் நடந்தேறியுள்ளது.
குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அனைவரும் சேர்ந்து பெரிய மளிகைக் கடைகளில் போலி ஆயுதங்களைக் காட்டி கொள்ளைகளை நடத்த சதித் திட்டம் தீட்டியுள்ளனர். இந்தச் சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகுமாறு திட்டமிட்டுள்ளனர். மேலும், இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு அந்நாடு தண்டனையை வழங்கும்.
இதன் மூலம் தாங்கள் ஒரு குற்றச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எனக் கூறி ‘யு விசா’ பெறுவதே அவர்களின் நோக்கமாக இருந்துள்ளது.
‘யு விசா’ பெறுவதன் வழியாக அந்த நாட்டில் சட்டப்படி தங்கும் உரிமையையும் ‘கிரீன் கார்டு’ என்ற குடியுரிமையும் பெறலாம் என்பது அமெரிக்காவின் சட்டமாக உள்ளது.
இதனால், அமெரிக்காவில் கிரீன் கார்டு பெறுவதற்காக இது மாதிரியான குறுக்கு வழிகளைப் பலரும் கையாளுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...