நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 179 நாள்களுக்குப் பிறகு 2.54 லட்சமாக குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 6-ஆம் தேதி 2.53 லட்சம் பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்தனர். இதுவே மிகக் குறைவாக இருந்த நிலையில், 179 நாள்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் குறைந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 20,035 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், 23,181 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 35 நாள்களாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையை விட குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மொத்தமாக குணமடைவோர் எண்ணிக்கை 99 லட்சத்தை நெருங்குகிறது. இதனால் குணமடைவோர் விகிதம் 96.08 சதவிகிதமாக உள்ளது. இதில் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மட்டும் 78 சதவிகிதத்தினர் குணமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளம், மகாராஷ்டிரம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் குணமடைவோர் விகிதம் அதிகமாகவுள்ளது.
இதேபோன்று 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மட்டுமே 80.19 சதவிகித பாதிப்புகள் பதிவாகி வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் 1984 : மூன்றாவது முறையாக முதல்வர் எம்ஜிஆர்!
தேர்தலுக்கிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர்: மத்திய அரசு மீது திருச்சி சிவா குற்றச்சாட்டு

ராஜஸ்தானில் மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலி! கண்காணிப்பு தீவிரம்!
பாரபட்சமற்ற தேர்தல் வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு திரிணமூல் காங்கிரஸ் கண்டனம்
வீடியோக்கள்

உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! | Vijay full speech | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு


