ராஜஸ்தானில், கடந்த 5 நாள்களில் மர்ம காய்சல் பாதிப்பால் 5 குழந்தைகள் பலியாகியுள்ளனர்.
சலம்பர் மாவட்டத்தின் லால்புரா மற்றும் காட்டா ஆகிய கிராமங்களைச் சேர்ந்த, 2 முதல் 4 வயதுடைய 5 குழந்தைகள் காய்ச்சல் மற்றும் வாந்தி ஆகிய பாதிப்புகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால், அறிகுறிகள் தென்பட்ட 24 மணிநேரங்களில் பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் தம்பி உள்பட 5 பேரும் உயிரிழந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, குழந்தைகளின் திடீர் மரணங்களுக்கான காரணம் குறித்து தெரியாததால், மருத்துவக் குழுக்கள் களமிறக்கப்பட்டு பாதிக்கப்பட்ட 2 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 560 குடும்பங்களும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், மர்ம காயச்சலுக்கான அறிகுறிகளுடன் மேலும் 8 குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காய்ச்சலுக்கான காரணம் குறித்து ஆய்வு முடிவுகள் வெளியான பின்னரே தெரிய வரும் எனக் கூறப்படும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள கால்நடைத் தொழுவங்களில், அதிகாரிகள் கிருமி நாசினிகள் மூலம் தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
It has been reported that five children have died in Rajasthan over the past five days due to a mysterious fever.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்! இதுவரை 290 பெண்கள் உள்பட 2,198 பேர் பலி!

ராஜஸ்தானில் அம்பேத்கர் சிலை சேதம்: மக்கள் போராட்டம்

மணிப்பூரில் வெடிகுண்டு தாக்குதல்! 2 குழந்தைகள் பலி!

நைஜீரியாவில் தொடரும் அவலம்! ஒரே நாளில் பெண்கள், குழந்தைகள் உள்பட 300 பேர் கடத்தல்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு



