ராஜஸ்தானின் பச்சபத்ரா நகரத்தில் ரூ.80,000 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை வரும் மார்ச் 21 அன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்டோரா மாவட்டத்தில் உள்ள பச்சபத்ரா நகரத்தில் ரூ.80,000 கோடி மதிப்பீட்டில் புதிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய ஆலையின் மூலம் சுமார் 50,000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் எனவும், நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் முன்னேற்றம் ஏற்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் திறப்பு விழா குறித்து ஆலோசனை மேற்கொள்ள ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா தில்லி சென்றிருந்தார். பிரதமர் மோடி, பாஜக தலைவர் நிதின் நபீன் மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை நேரில் சந்தித்து அவர் உரையாடினார்.
இந்த நிலையில், நாட்டின் முதல் ஒருங்கிணைந்த பெட்ரோகெமிக்கல் வளாகமாகக் கருதப்படும் பச்சபத்ரா சுத்திகரிப்பு ஆலையை வரும் ஏப்.21 அன்று பிரதமர் மோடி திறந்துவைப்பதாக, அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் அங்கு செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அப்பகுதி முழுவதும் சாலை, குடிநீர், போக்குவரத்து, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தையும் மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Summary
PM Modi will inaugurate the ₹80,000 crore oil refinery, in the city of Pachpadra on March 21.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாணவர்களை நீங்கள் மன்னிக்கத் தேவையில்லை; நீங்கள்தான் மன்னிப்பு கேட்க வேண்டும்: ராகுல்

இன்ஃப்ளூயன்சராக பிரதமர் மோடி சிறப்பாக செயல்படுகிறார்: அபிஜீத் தீப்கே விமர்சனம்!

தவறுதலாக நடந்துவிட்டது! மோடி விடியோ பிளாக் செய்யப்பட்டது குறித்து ஃபேஸ்புக் விளக்கம்
மோடி ஆட்சியின்கீழ் 25 கோடி பேர் வறுமையில் இருந்து வெளிவந்துள்ளனர்: நியூஸி. பிரதமர்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



