எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: ராணுவ வீரர் வீரமரணம்
ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் வீரமரணமடைந்தார்.


ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் வீரமரணமடைந்தார்.
பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்தியாவின் ஜம்மு பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவமும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ் சேரா செக்டரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது.
அவா்களுக்கு இந்திய ராணுவத்தினா் தக்க பதிலடி கொடுத்தனா். சுமார் 2 மணிநேரம் நீடித்த இந்த சண்டையில் இந்திய வீரர் ரவீந்தர் காயமடைந்தனர். இதையடுத்து அவர் வீரமரணமடைந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...