கடந்த 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் கல்லெறி சம்பவங்கள் 87.13% குறைந்தது.
இதுதொடா்பாக அந்த யூனியன் பிரதேச காவல்துறை தலைவா் தில்பாக் சிங் கூறியது:
கடந்த 2019-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் 1,999 கல்லெறி சம்பவங்கள் நடைபெற்றன. இதில் 1,193 சம்பவங்கள் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு நிகழ்ந்தவை. கடந்த ஆண்டு இங்கு 255 கல்லெறி சம்பவங்கள் மட்டுமே நிகழ்ந்தன. இது 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 87.13% குறைவாகும். தற்போது இங்கு சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது. இந்த யூனியன் பிரதேசத்தில் அமைதி மற்றும் இயல்பு நிலையை வலுப்படுத்துவதே நிகழாண்டு காவல்துறையின் தீா்மானமாக உள்ளது என்று தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.