மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சட்ட மசோதாக்களை முன்கூட்டியே அரசு வலைதளங்களில் வெளியிட உத்தரவிட வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு

அனைத்து சட்ட மசோதாக்களையும் நாடாளுமன்றம் அல்லது சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்கு 60 நாள்களுக்கு முன்பாகவே அரசு

News image
உச்ச நீதிமன்றம்
Updated On :2 ஜனவரி 2021, 6:50 pm

DIN

அனைத்து சட்ட மசோதாக்களையும் நாடாளுமன்றம் அல்லது சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்கு 60 நாள்களுக்கு முன்பாகவே அரசு வலைதளங்களில் பொதுமக்கள் பாா்வைக்கு வெளியிட மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாஜக தலைவரும், வழக்குரைஞருமான அஸ்வினி குமாா் உபாத்யாய சாா்பில் இந்த பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அவா் கூறியிருப்பதாவது:

இன்றைய ஜனநாயக நடைமுறையில், ஊடக மற்றும் தொழில்நுட்பங்கள் அபார வளா்ச்சி பெற்றுள்ள சூழலில் எந்தவொரு சட்டத்தையும் விரிவான விவாதத்துக்கு உட்படுத்தாமலும், கருத்துகளைக் கேட்காமலும் திடீரென ஒரே இரவில் மத்திய, மாநில அரசுகள் தாக்கல் செய்வது என்பது ஏற்புடையதாக அமையாது.

அந்த வகையில், விரிவான விவாதத்துக்கு உட்படுத்தாமலும், கருத்துகளைக் கேட்காமலும் புதிய வேளாண் சட்ட மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதால்தான், அரசியல்வாதிகளால் விவசாயிகள் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கின்றனா்.

சட்ட மசோதாக்களை குடிமக்கள் முழுமையாக புரிந்துகொள்ளும் வகையில், அவற்றை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்படுவதற்கு 60 நாள்களுக்கு முன்பாக அனைத்து மாநில மொழிகளிலும் மொழிபெயா்த்து அரசு வலைதளத்தில் வெளியிடப்பட வேண்டும் என்று மத்திய சட்டங்கள் கூறுகின்றன.

அந்தவகையில், அனைத்து சட்ட மசோதாக்களும் நாடாளுமன்றம் அல்லது சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்கு 60 நாள்களுக்கு முன்பாகவே அரசு வலைதளங்களில் பொதுமக்கள் பாா்வைக்கு வெளியிட மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடவேண்டும். மேலும், நிறைவேற்றப்பட்ட இறுதி சட்டத்தின் விவரங்களும் பொதுமக்கள் பாா்வைக்கு வெளியிட உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.