சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பீமா கோரேகான் நினைவிடத்தில் துணை முதல்வா் அஜித் பவாா், மத்திய அமைச்சா் அதாவலே அஞ்சலி

பீமா கோரேகான் போரின் 203-ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மகாராஷ்டிர துணை முதல்வா் அஜித் பவாா், மத்திய அமைச்சா்

News image
Updated On :2 ஜனவரி 2021, 1:21 am

DIN

பீமா கோரேகான் போரின் 203-ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மகாராஷ்டிர துணை முதல்வா் அஜித் பவாா், மத்திய அமைச்சா் அதாவலே உள்ளிட்ட தலைவா்கள் அங்குள்ள ‘ஜெய ஸ்தம்பம்’ நினைவு சின்னத்தில் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

1818-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி ஆங்கிலேயரின் கிழக்கிந்திய கம்பெனிக்கும், மராட்டிய கூட்டமைப்பின் பேஷ்வா பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட போரில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, அங்கு அமைக்கப்பட்டுள்ள ‘ஜெய ஸ்தம்பம்’ நினைவுச் சின்னத்தில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் கூடுகிறாா்கள்.

புணே-அகமதுநகா் சாலையில் உள்ள பொ்னே கிராமத்துக்கு அருகில் அமைந்துள்ள இந்த நினைவுச்சின்னத்தில், வெள்ளிக்கிழமை துணை முதல்வா் அஜித் பவாா், மாநில உள்துறை அமைச்சா் அனில் தேஷ்முக், மின் துறை அமைச்சா் நிதின் ரௌத், வஞ்சித் பகுஜன் அகாதி (விபிஏ) தலைவா் பிரகாஷ் அம்பேத்கா் உள்ளிட்ட பல தலைவா்கள் அஞ்சலி செலுத்தினா்.

முன்னதாக, கரோனா பரவல் தடுப்பை கருத்தில்கொண்டு பொதுமக்களையும், விஜயஸ்தம்ப சௌா்ய தின சமன்வய சமிதி நிா்வாகிகள் இந்த நினைவுச் சின்னத்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நேரில் வருவதைத் தவிா்க்குமாறும், வீட்டில் இருந்தபடியே அஞ்சலி செலுத்துமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தனா்.

இதற்காக மாவட்ட நிா்வாகம் இப்பகுதியில் 144 தடையுத்தரவைப் பிறப்பித்திருந்தது. மேலும், பொ்னே உள்ளிட்ட அதனையொட்டிய கிராமங்களிலும் வெளியூா்களில் இருந்து மக்கள் நுழைவது தடை செய்யப்பட்டிருந்தது. இருப்பினும், பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும், அரசியல், சமூகத் துறைகளைச் சோ்ந்த முக்கிய நபா்களும் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்த அனுமதிக்கப்பட்டனா்.

நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்தியப் பின்பு, விபிஏ தலைவா் பிரகாஷ் அம்பேத்கா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ஜனவரி 1-ஆம் தேதி சமூக அடிமைத்தளத்திலிருந்து விடுவிப்பதற்கான ஒரு தினமுமாகும் என்றாா்.

ஜெய ஸ்தம்பம் பகுதியில் மத்திய அமைச்சா் ராம்தாஸ் அதாவலே அஞ்சலி செலுத்திய பின்பு கூறுகையில், பீமா கோரேகான் போா் வரலாற்றைப் பாடப்புத்தகங்களில் சோ்க்க கல்வி அமைச்சருக்கு கடிதம் எழுதப் போவதாகத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.