சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பாஜக - ஆர்எஸ்எஸ் ஒருங்கிணைப்புக் கூட்டம் ஜன.5 -இல் தொடக்கம்

​பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-இன் ஒருங்கிணைப்புக் கூட்டம் ஜனவரி 5 முதல் 7 வரை ஆமதாபாத்தில் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image
Updated On :2 ஜனவரி 2021, 10:54 am

DIN


பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-இன் ஒருங்கிணைப்புக் கூட்டம் ஜனவரி 5 முதல் 7 வரை ஆமதாபாத்தில் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தது:

"இந்தக் கூட்டத்துக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தலைமை வகிப்பார். பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கிறார். 2 நாள்கள் ஆமதாபாத்தில் தங்கவுள்ள நட்டா, முதல் நாளில் இந்த ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பங்கேற்கிறார். அதற்கு அடுத்த நாள் கட்சி நிர்வாகிகளைச் சந்திக்கிறார்.

மத்திய அரசு குறித்த மதிப்பீடும் கூட்டத்தில் இடம்பெறலாம் என்பதால், மத்திய அமைச்சர்களும் கூட்டத்தில் பங்கேற்கலாம் எனத் தெரிகிறது. 

வேளாண் சட்டங்கள் மற்றும் விவசாயிகள் போராட்டம், மேற்கு வங்கம், அசாம், கேரளம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் உள்ளிட்டவை பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம்."

தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் வரவுள்ளன. இந்த நிலையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.