ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கம் இந்தியாவில் தொடங்கவுள்ளது: பிரதமர் மோடி

கரோனா வைரஸுக்கு எதிரான உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கம் இந்தியாவில் தொடங்க உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

News image
பிரதமர் மோடி (கோப்புப்படம்)
Updated On :4 ஜனவரி 2021, 8:33 am

DIN

கரோனா வைரஸுக்கு எதிரான உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கம் இந்தியாவில் தொடங்க உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் அவசரகால பயன்பாட்டின் அடிப்படையில் பாரத் பயோடெக் நிறுவனம் இந்தியாவில் தயாரித்த கோவேக்ஸின் தடுப்பூசியையும், ஆக்ஸ்ஃபோா்டு பல்கலை. துணையுடன் சீரம் நிறுவனம் உருவாக்கிய கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசியையும், பொதுமக்களுக்கு செலுத்த மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை அனுமதி அளித்துள்ளது. 

இதையடுத்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பரிசோதனையில் உள்ள தடுப்பூசி விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் தேசிய அறிவியலாளர்கள் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, 'மேட் இன் இந்தியா' கரோனா தடுப்பூசிகளுக்கு விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். 

பின்னர் பேசிய அவர், உலகின் மிகப்பெரிய கரோனா தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கப்பட உள்ளது. இதற்காக, அதன் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் பங்களிப்பு குறித்து நாடு பெருமிதம் கொள்கிறது என்றார். 

மேலும், 'மேட் இன் இந்தியா' தயாரிப்புகளுக்கு உலகளாவிய தேவை மட்டுமின்றி உலக மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். அளவை விட தரம் முக்கியமானது. ஆத்மநிர்பர் பாரத்திற்கான தேடலில் நமது தரத்துடன் நமது தரமும் உயர வேண்டும்' என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.