மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

டிராக்டர் பேரணி ஜனவரி 7-க்கு ஒத்திவைப்பு: விவசாய சங்கங்கள்

தில்லியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஜனவரி 6-ம் தேதி மேற்கொள்ளவிருந்த டிராக்டர் பேரணியை ஜனவரி 7-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாக விவசாய சங்கங்கள் தெரிவித்தன.

News image
Updated On :5 ஜனவரி 2021, 4:46 pm

DIN


தில்லியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஜனவரி 6-ம் தேதி மேற்கொள்ளவிருந்த டிராக்டர் பேரணியை ஜனவரி 7-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாக விவசாய சங்கங்கள் தெரிவித்தன.

சிங்கு எல்லையில் விவசாய சங்க பிரதிநிதிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தனர். வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் வரும் நாள்களில் தீவிரப்படுத்தப்படும் என விவசாய சங்கங்கள் தெரிவித்தனர். 

இதுபற்றி ஸ்வராஜ் அபியன் தலைவர் யோகேந்திர யாதவ் தெரிவித்தது:

"புதிய வேளாண் சட்டங்கள் நடைமுறைக்கு வந்து 7 மாதங்கள் ஆகிவிட்டன. விவசாயிகளுடன் மத்திய அரசு 7 முறை பேச்சுவார்த்தை நடத்திவிட்டது. ஆனால், "வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்" என்கிற விவசாயிகளின் கோரிக்கைக்கு மட்டும் அரசு செவி சாய்க்கவில்லை. மோசமான வானிலை சூழல் காரணமாக டிராக்டர் பேரணி 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது."

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து ஏராளமான விவசாயிகள் தில்லியில் கடும் குளிருக்கு மத்தியிலும் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்தாண்டு நவம்பர் 26-இல் தொடங்கிய போராட்டம் 40 நாள்களுக்கும் மேல் நீடித்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசு மற்றும் விவசாயிகளுக்கிடையே நடைபெற்ற 7 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன. இருதரப்புக்கும் இடையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வரும் 8-ம் தேதி நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.