சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கேரளத்தில் மேலும் 5,528 பேருக்கு கரோனா

கேரளத்தில் புதிதாக 5,528 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :9 ஜனவரி 2021, 2:08 pm

DIN


கேரளத்தில் புதிதாக 5,528 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,06,603 ஆக உயர்ந்துள்ளது. 

5,424 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 7,38,808 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 22 பேர் கரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 3,279 ஆக உயர்ந்துள்ளது.

இன்னும் 64,318 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர். 2,02,171 பேர் பல்வேறு மாவட்டங்களில் கண்காணிப்பில் உள்ளனர். 

கடந்த 24 மணி நேரத்தில் 61,239 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 9.03 சதவிகிதமாக உள்ளது. பிரிட்டனிலிருந்து திரும்பியவர்கள் யாருக்கும் தொற்று பாதிப்பு இருப்பது கடந்த 24 மணி நேரத்தில் உறுதி செய்யப்படவில்லை. இதுவரை பிரிட்டனிலிருந்து திரும்பியவர்களில் மொத்தம் 50 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 6 பேருக்கு புதிய வகை கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.