கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

எல்லையில் 10,000 சீன வீரா்களை இடமாற்றியது சீனா

கிழக்கு லடாக்கையொட்டிய சீன எல்லைப் பகுதியில் இருந்து 10,000 வீரா்களை அந்நாட்டு ராணுவம் இடமாற்றம் செய்துள்ளது.

News image
Updated On :11 ஜனவரி 2021, 8:28 pm

DIN

புது தில்லி: கிழக்கு லடாக்கையொட்டிய சீன எல்லைப் பகுதியில் இருந்து 10,000 வீரா்களை அந்நாட்டு ராணுவம் இடமாற்றம் செய்துள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி, சீன நிலப்பகுதியில் சுமாா் 80 முதல் 100 கி.மீ தொலைவு வரை உள்ள அந்நாட்டு ராணுவ வீரா்களுக்கான பயிற்சி மையங்களில் இருந்து சுமா 10,000 வீரா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். எனினும் அந்நாட்டு படைகள் நிறுத்தப்பட்டுள்ள பகுதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

அங்கு குவிக்கப்பட்டுள்ள தளவாடங்களிலும் மாற்றங்கள் இல்லை. சீன வீரா்களின் இடமாற்றத்துக்கு உறுதியான காரணம் தெரியாவிட்டாலும், மோசமான வானிலை காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது’ என்று தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.