கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஏர் இந்தியா விமானம் மூலம் தில்லிக்கு வந்த 4 பேருக்கு கரோனா தொற்று

ஏர் இந்தியா விமானம் மூலம் லண்டனிலிருந்து தில்லிக்கு வந்த நான்கு பயணிகளுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

News image
ஏர் இந்தியா விமானம்
Updated On :11 ஜனவரி 2021, 7:41 am

PTI

புது தில்லி: ஏர் இந்தியா விமானம் மூலம் லண்டனிலிருந்து தில்லிக்கு வந்த நான்கு பயணிகளுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

பிரிட்டனில் புதிய வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, பிரிட்டனிலிருந்து இந்தியாவிற்கு வரும் அனைத்து விமானச் சேவைகளும் டிசம்பர் 23 முதல் ஜனவரி 7 வரை மத்திய அரசால் நிறுத்தப்பட்டிருந்தது. 

இந்நிலையில் கடந்த ஜன.8 முதல் மீண்டும் விமானச் சேவை தொடங்கியுள்ளதை அடுத்து, ஏர் இந்தியாவின் ஏஐ162 விமானம் ஞாயிறன்று இரவு 10.30 மணியளவில் 186 பயணிகளுடன் லண்டனிலிருந்து தில்லி விமான நிலையத்தில் தரையிறங்கியது. 

தரையிறங்கிய அனைத்து பயணிகளுக்கும் ஆர்டி-பிசிஆர் சோதனை செய்யப்பட்டது. அதில் நான்கு பேருக்கு கரோனா தொற்று இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.