ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

வருமான வரி கணக்கு தாக்கல் 5% அதிகரிப்பு

நிகழாண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கை 5 சதவீதம் அதிகரித்துள்ளது.

News image
Updated On :13 ஜனவரி 2021, 2:23 am

DIN

நிகழாண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கை 5 சதவீதம் அதிகரித்துள்ளது.
 2020, மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த 2019-20-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரியை தனிநபர்கள் தாக்கல் செய்யும் கடைசி தேதி ஜன. 10 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. நிறுவனங்கள் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி பிப்ரவரி 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜன. 10-ஆம் தேதி வரை 5.95 கோடி பேர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. 2018-19-ஆம் நிதியாண்டில் 5.67 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்திருந்த நிலையில், நிகழாண்டு 33.35 லட்சம் பேர் கூடுதலாகத் தாக்கல் செய்துள்ளனர். இது 5 சதவீதம் அதிகமாகும்.
 நிகழாண்டு தனிநபர்களால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது குறைந்துள்ளது. அதேவேளையில் நிறுவனங்கள், அறக்கட்டளைகள் மூலம் தாக்கல் செய்வது அதிகரித்துள்ளது. முன்னதாக, கரோனா தொற்றுநோய் காரணமாக, வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் தேதியை மூன்று முறை மத்திய அரசு நீட்டித்தது. இதை மேலும் நீட்டிக்க மத்திய அரசு மறுத்துவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.