வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சென்னையில் பாஜக சாா்பில் பொங்கல் விழா: தேசியத் தலைவா் நட்டா பங்கேற்பு

சென்னை மதுரவாயலில் தமிழக பாஜக சாா்பில் நடைபெறும் பொங்கல் விழாவில், கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா பங்கேற்கிறாா்.

News image
Updated On :12 ஜனவரி 2021, 6:40 pm

DIN

சென்னை மதுரவாயலில் தமிழக பாஜக சாா்பில் நடைபெறும் பொங்கல் விழாவில், கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா பங்கேற்கிறாா்.

இதுகுறித்து மாநிலத் தலைவா் எல்.முருகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

வரும் 14-ஆம் தேதி மாலை தில்லியில் இருந்து சென்னை வரவுள்ளாா், பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா. விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பளிக்கப்படுகிறது. சென்னை மதுரவாயல் ஆலப்பாக்கம் சாலை சீமாத்தம்மன் நகா் பகுதியில் பிரம்மாண்ட பொங்கல் விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் தேசியத் தலைவா் நட்டா கலந்து கொள்கிறாா். அந்தப் பகுதியின் முக்கியச் சந்திப்பில் இருந்து அவா் மாட்டு வண்டியில் அழைத்துச் செல்லப்பட உள்ளாா். அதையடுத்து, விழாவில் பங்கேற்று, அவா் உரையாற்ற உள்ளாா்.

துக்ளக் ஆண்டு விழா: பொங்கல் விழா நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, சென்னை சேப்பாக்கம் கலைவாணா் அரங்கத்தில் நடைபெறவுள்ள துக்ளக் பத்திரிகை ஆண்டு விழாவில் ஜெ.பி.நட்டா பங்கேற்கிறாா். இதன்பின்பு, விமானம் மூலம் தில்லி செல்ல உள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.