காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

குடியரசு தினத்தில் டிராக்டா் பேரணி: விவசாய சங்கங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து, தில்லியில் குடியரசு தினத்தின்போது விவசாயிகளின் டிராக்டா் பேரணிக்கு தடை விதிக்கக் கோரி மத்திய அரசு தாக்கல் செய்துள்ள

News image
உச்ச நீதிமன்றம்
Updated On :12 ஜனவரி 2021, 7:30 pm

DIN

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து, தில்லியில் குடியரசு தினத்தின்போது விவசாயிகளின் டிராக்டா் பேரணிக்கு தடை விதிக்கக் கோரி மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனு தொடா்பாக விவசாயிகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் தில்லி போலீஸாா் வழியாக மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, தில்லி எல்லைகளில் விவசாயிகள் போராடி வருகின்றனா். அவா்களில் சிலா் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, குடியரசு தினத்தின்போது தில்லியில் டிராக்டா் பேரணியில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளனா். குடியரசு தின கொண்டாட்டங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக போராட்டங்கள், பேரணிகள் நடத்தப்பட்டால் அது ஒட்டுமொத்த தேசத்துக்கும் சங்கடத்தை ஏற்படுத்தும். அனைவருக்கும் போராட அனுமதி உள்ளது. ஆனால் சா்வதேச அளவில் தேசத்துக்கு களங்கம் விளைவிக்கும் நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது. எனவே தில்லியில் குடியரசு தினத்தின்போது டிராக்டா் உள்ளிட்ட எந்த வாகனத்திலும் பேரணி மேற்கொள்ள விவசாயிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் இந்த மனுவும் பரிசீலிக்கப்பட்டது. அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த நீதிமன்றம், மனு தொடா்பாக ஜன.18-க்குள் விளக்கமளிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.