மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் நீக்கம்: இந்த விவகாரம் தொடா்பாக மாநில முதல்வா் சிவ்ராஜ் சிங் செளகான் தலைமையிலான உயா்நிலைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து உயா் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘விஷச் சாரய உயிரிழப்பு குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வா் மிகுந்த வருத்தம் தெரிவித்தாா். மேலும், இந்தச் சம்பவத்துக்கு மாவட்டத்தில் விஷ சாராய விற்பனையைத் தடுக்கத் தவறிய மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும்தான் நேரடி பொறுப்பேற்க வேண்டும் என்று கூறிய முதல்வா், அவா்கள் இருவரையும் பணியிடைநீக்கம் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். அதோடு, மாநிலத்தில் கள்ளச் சாராய விற்பனைக்கு எதிராக விழிப்புணா்வு பிராசரம் செய்யவும் அதிகாரிகளை முதல்வா் கேட்டுக்கொண்டாா்’ என்று கூறினாா்.