மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,579 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,579 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது
கோப்புப்படம்
கோப்புப்படம்


மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,579 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 3,579 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 19,81,623 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 3,309 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 70 பேர் பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 18,77,588 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 50,291 பேர் பலியாகியுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி மகாராஷ்டிரத்தில் 52,558 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர்.

அங்கு குணமடைவோர் விகிதம் 94.75 சதவிகிதமாக உள்ளது. இறப்பு விகிதம் 2.54 சதவிகிதமாக உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com