அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நாட்டில் இதுவரை 10.43 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி

நாட்டில் இதுவரை 10.43 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

News image
நாட்டில் இதுவரை 10.43 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி
Updated On :22 ஜனவரி 2021, 6:49 am

DIN


புது தில்லி: நாட்டில் இதுவரை 10.43 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கி 6 நாள்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை மொத்தம் 10.43 லட்சம் மருத்துவப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

நாடு முழுவதும் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 10,43,534 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,37,050 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

அதிகபட்சமாக கர்நாடகத்தில் 1,38,807 பேருக்கும், ஆந்திரத்தில் 1,15,365 பேருக்கும், ஒடிசாவில் 1,13,623 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 42,947 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.