நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

புவனேஸ்வரத்தில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் பணியில் திருநங்கைகள்

புவனேஸ்வரத்தில் பார்க்கிங் கட்டணத்தை வசூலித்து நிர்வகிக்கும் பொறுப்பை புவனேஸ்வரம் மாநகராட்சி திருநங்கைகளிடம் வழங்கியுள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :22 ஜனவரி 2021, 12:39 pm IST

புவனேஸ்வரத்தில் பார்க்கிங் கட்டணத்தை வசூலித்து நிர்வகிக்கும் பொறுப்பை புவனேஸ்வரம் மாநகராட்சி திருநங்கைகளிடம் வழங்கியுள்ளது. 

'இது அவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு. இதனால் அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல் அவர்களின் நம்பிக்கையையும் அதிகரிக்க முடியும். திருநங்கைகள் சமூகம் எங்களது பல்வேறு திட்டங்களில் நீண்ட காலமாக ஈடுபட்டுள்ளன. முன்னதாக நிலுவையில் உள்ள வரியை வசூலிக்கவும் திருநங்கைகள் ஈடுபடுத்தப்பட்டனர்' என்று புவனேஸ்வரம் மாநகராட்சி ஆணையர் பிரேம் சந்திரா சௌத்ரி தெரிவித்தார். 

மேலும் அவர் கூறுகையில், 'பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் இந்தப் பணி இப்போது இரண்டு மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் உள்ளது. இந்த முயற்சி வெற்றி பெறும் என்று நம்புகிறோம். இரு மாதங்களுக்குப் பின்னர் திட்டத்தை விரிவுபடுத்துவோம்' என்றார்.  

திருநங்கைகள் சுய உதவிக் குழுத் தலைவர் மேக்னா சாஹூ இதுகுறித்து, 'திருநங்கைகளின் சார்பாக, மாநகராட்சி ஆணையர் பிரேம் சந்திரா சௌத்ரிக்கு நன்றி. இது எங்கள் சமூகத்தினருக்கு கண்ணியமான வாழ்க்கையை வாழ வாய்ப்பளிக்கும். இது. திருநங்கைகளை பிரதானமாகக் கொண்டு வருவதற்கான ஒரு படி. முதற்கட்டமாக 15 திருநங்கைகள், 2 திருநம்பிகள் பணியில் உள்ளனர். இது பின்னர் 36 ஆக உயர்த்தப்படும். 2 மணி நேர வாகன நிறுத்தத்திற்கு, இரு சக்கர வாகனம்- ரூ.5, நான்கு சக்கர வாகனம்- ரூ.25 வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.