புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

விவசாயிகளுக்கு ஆதரவாக காங். பேரணி: காவல்துறை விரட்டியடிப்பு

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியினர் பேரணியில் ஈடுபட்டனர். 

News image

விவசாயிகளுக்கு ஆதரவாக காங். பேரணி: காவல்துறை விரட்டியடிப்பு

Updated On :23 ஜனவரி 2021, 12:59 pm

DIN

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியினர் பேரணியில் ஈடுபட்டனர். 

கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் காவல்துறையினர் அவர்களை விரட்டியடித்தனர். 

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் பேரணியில் ஈடுபட்டனர்.

போபாலில் ஜவஹர் செளக் பகுதியிலிருந்து ஆளுநர் மாளிகை வரை நடைபெற்ற இந்த பேரணியில், காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தடையை மீறி பேரணி நடத்தியதால், பேரணியை தடுத்து நிறுத்தும் வகையில் காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்தும், கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும் காங்கிரஸ் தொண்டர்களை கலைத்தனர்.

மேலும், காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங், ஜெய்வர்தன் சிங், குணால் செளத்ரி உள்ளிட்ட பல காங்கிரஸ் தொண்டர்களை காவல்துறையினர் கைது செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.