தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நேதாஜி பிறந்தநாள்: பேரணியைத் தொடக்கினார் மம்தா

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் கொல்கத்தாவில் பிரமாண்ட பேரணி தொடங்கியது.

News image

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

Updated On :23 ஜனவரி 2021, 9:26 am

DIN


நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் கொல்கத்தாவில் பிரமாண்ட பேரணி தொடங்கியது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேரணியைத் தொடக்கி வைத்து பங்கேற்றுள்ளார்.

7 கிலோமீட்டர் தொலைவிற்கு நடைபெறும் இந்த பேரணி நேதாஜி சிலையிடம் சென்று நிறைவுபெறுகிறது.

வடக்கு கொல்கத்தாவிற்கு அருகேயுள்ள ஷியாம்பஸார் நகரில் நேதாஜி பிறந்த நேரமான பிற்பகல் 12.15 மணிக்கு பேரணி தொடங்கியது.

இது தொடர்பாக பேசிய அவர், தேர்தல் அறிவிக்கப்பட்ட ஆண்டு மட்டும் நாங்கள் நேதாஜியின் பிறந்தநாளை கொண்டாடவில்லை. நேதாஜியின் 125-வது பிறந்தநாளை பிரமாண்டமான முறையில் கொண்டாடுகிறோம்.

நேதாஜி நமது நாட்டின் மிகச்சிறந்த விடுதலை போராட்ட வீரர். அவர் மிகச்சிறந்த தத்துவவாதி என்று குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.