டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

'எரிவாயு-டீசல்-பெட்ரோல்(ஜிடிபி) விலையில் மோடி அரசின் மிகப்பெரிய வளர்ச்சி' - ராகுல் காந்தி

எரிவாயு-டீசல்-பெட்ரோல் விலையில் பிரதமர் மோடி மிகப்பெரிய வளர்ச்சியைக் காட்டியுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

News image
ராகுல் காந்தி
Updated On :24 ஜனவரி 2021, 5:49 am

DIN

எரிவாயு-டீசல்-பெட்ரோல் விலையில் பிரதமர் மோடி மிகப்பெரிய வளர்ச்சியைக் காட்டியுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

எரிபொருள் விலை உயர்வு கண்டித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டர் பக்கத்தில் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். 

இதுகுறித்து அவர், 'பிரதமர் மோடி 'ஜிடிபி'யில் அதிக வளர்ச்சியைக் காட்டியுள்ளார். அதாவது 'ஜிடிபி' என்பது எரிவாயு-டீசல்-பெட்ரோல் (gas-diesel-petrol price) விலையில் மிகப்பெரிய வளர்ச்சியைக் காட்டியுள்ளார். 

பொதுமக்கள் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மோடி அரசோ வரி வசூலில் பிஸியாக உள்ளது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 88.38 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 81.23 ஆகவும் உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.