மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்துங்கள்: மோடியின் தாயாருக்கு விவசாயி கடிதம்

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்துங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடியின் தாயாருக்கு விவசாயி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.

News image
நரேந்திர மோடியும், அவரது தாயாரும்
Updated On :24 ஜனவரி 2021, 1:00 pm

DIN

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்துங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடியின் தாயாருக்கு விவசாயி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் தில்லி எல்லையில் 59 நாள்களாக நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய தங்கள் மகனிடம் வலியுறுத்துங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபின் மோடிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். 

அதில், ''வேளாண் சட்டங்களை ரத்து செய்ய தங்கள் மகனிடம் வலியுறுத்த வேண்டும் என விவசாயி ஆகிய நான் தங்களிடம் கோரிக்கை வைக்கிறேன். யாருடைய கோரிக்கையினையும் மகன் நிராகரிக்கலாம். ஆனால் ஒரு தாயின் கோரிக்கையை மகனால் நிராகரிக்க இயலாது.

தாங்கள் அவ்வாறு செய்தால் இந்த நாடே உங்களுக்கு நன்றி கூறி வணங்கும். ஒரு தாயாக தங்கள் மகனிடம் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்துங்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.