கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சிக்கிம் எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு

சிக்கிம் எல்லையில் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தின் முயற்சியை இந்திய வீரர்கள் முறியடித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :25 ஜனவரி 2021, 6:31 am

DIN

சிக்கிம் எல்லையில் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தின் முயற்சியை இந்திய வீரர்கள் முறியடித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் கடந்த ஆண்டு மே மாதம் சீனா அத்துமீறலில் ஈடுபட்டதைத் தொடா்ந்து, இரு நாடுகளிடையே அப்போது முதல் மோதல் போக்கு நடைபெற்று வருகிறது. இரு நாடுகள் சாா்பிலும் எல்லையில் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.

படைகளைத் திரும்பப் பெறுவது தொடா்பாக இந்தியா, சீனா நாடுகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இரண்டரை மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை 9 ஆம் சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

இந்த நிலையில் சிக்கிம் எல்லையில் நகுலா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சீன வீரர்கள் இந்திய எல்லையில் ஊடுருவ முயற்சி செய்ததாகவும், இந்த ஊடுருவல் முயற்சியை இந்திய வீரர்கள் முறியடித்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இரு நாட்டு வீரர்களிடையே நடந்த இந்த மோதலில் சீன வீரர்கள் 20 பேர் வரையில் காயமுற்றுள்ளதாகவும் தகவல்கள். தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.