தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

‘குடியரசுத் தலைவரின் உரையைப் புறக்கணித்தது துரதிருஷ்டவசமானது’: அமைச்சர் ரவிசங்கர்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவரின் உரையை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தது துரதிருஷ்டவசமானது என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

News image
மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்
Updated On :29 ஜனவரி 2021, 10:36 am

DIN

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவரின் உரையை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தது துரதிருஷ்டவசமானது என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்நிலையில் வேளாண் சட்டங்களை எதிர்த்து குடியரசுத் தலைவரின் உரையை காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட 17 எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், “குடியரசுத் தலைவர் அனைவருக்குமானவர். அவர் இந்திய அரசியலமைப்பின் தலைவர். ஜனநாயகத்தில் அவரது உரையை மதிப்பது என்பது ஆரோக்கியமான நடைமுறையாகும்.” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, ”குடியரசுத் தலைவர் உரையை எதிர்க்கட்சிகள், குறிப்பாக 50 ஆண்டுகளாக இந்த நாட்டை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி புறக்கணித்திருப்பது துரதிருஷ்டவசமானது” என ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.