ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் நெல் வைக்கோல் படப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று வயது குழந்தை உயிரிழந்துள்ளது. மேலும், குடும்ப உறுப்பினர்கள் 3 பேர் பலத்த காயமடைந்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
ராஜ்நகர் காவல் நிலைய பகுதியில் உள்ள கடலோர கிராமமான ஒகிலோபாலாவில் குடும்ப உறுப்பினர்கள் தங்கள் பண்ணையில் அறுவடை செய்யப்பட்ட நெல்லைக் காப்பதற்காக வீட்டின் பின்புறத்தில் ஒரு தற்காலிக கூடாரத்திற்குள் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மண்ணெண்ணெய் விளக்கில் இருந்து வைக்கோல் தீ பிடித்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இருப்பினும் மூன்று வயது குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
காயமடைந்தவர்கள் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அங்கு அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக காவல்துறையினர் கூறினர். சம்பவம் குறித்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆண்டிமடம் அருகே சுமை ஆட்டோ தீப்பிடித்து விபத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்

உணவகத்தில் அராஜகம்: சிறுவன் உள்ளிட்ட இருவா் கைது

காரைக்கால் அருகே மீனவா் தற்கொலை

மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


