எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

மேற்கு வங்க பேரவைத் தோ்தல் வன்முறையின்றி நடைபெற வேண்டும்: ஆளுநா் ஜகதீப் தன்கா்

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வன்முறையின்றி அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என்று அந்த மாநில ஆளுநா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா்.

News image
ஆளுநா் ஜகதீப் தன்கா்
Updated On :31 ஜனவரி 2021, 5:17 am

DIN

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வன்முறையின்றி அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என்று அந்த மாநில ஆளுநா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா்.

மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினத்தையொட்டி, மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவின் மேயோ சாலையில் உள்ள காந்தியடிகளின் சிலைக்கு மாநில ஆளுநா் ஜகதீப் தன்கா் சனிக்கிழமை மரியாதை செலுத்தினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘தேசத் தந்தையான மகாத்மா காந்தியடிகள் நமக்கு அகிம்சையை கற்பித்துள்ளாா். மாநிலத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் போது அகிம்சையை கடைப்பிடிக்க வேண்டும்.

கடந்த 2018-ஆம் ஆண்டு மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தோ்தலை போல், வரும் சட்டப்பேரவைத் தோ்தலும் ரத்தக் கறையுடன் இருக்கக் கூடாது. அந்தத் தோ்தல் முழுவதும் அகிம்சை வழியில் அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.