‘தேர்தலுக்கு பிந்தைய வன்முறையில் 300 பெண்கள் துன்புறுத்தப்பட்டனர்’: சுவேந்து அதிகாரி

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறையில் 300க்கும் அதிகமான பெண்கள் துன்புறுத்தப்பட்டதாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
சுவேந்து அதிகாரி
சுவேந்து அதிகாரி
Published on
Updated on
1 min read

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறையில் 300க்கும் அதிகமான பெண்கள் துன்புறுத்தப்பட்டதாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்கிய நிலையில், ஆளுநர் உரையின் போது தேர்தலுக்கு பிந்தைய வன்முறை குறித்து முக்கியமான தகவல்கள் இடம்பெறாததால் எதிர்க்கட்சியான பாஜக வெளிநடப்பு செய்தது.

இந்நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி பேசியதாவது,

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பின்பு நடைபெற்ற வன்முறை காட்டுமிராண்டித்தனமானது. இதில் பாஜக ஊழியர்கள் கொலை செய்யப்பட்டனர். 300க்கும் அதிகமான பெண்கள் துன்புறுத்தப்பட்டனர், அதில் சிலர் பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாகினர். இதுகுறித்த எந்த தகவல்களும் ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை. எனவே சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வன்முறை குறித்த விசாரணையை தன்னாட்சி அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கொல்கத்தா உயர்நீதிமன்ற தீர்பை வரவேற்கிறோம். மேலும், இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையை வேறு மாநிலத்தில் பதிய வேண்டும். அப்போது தான் விசாரணை நேர்மையாக நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார். 

இன்று தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டமானது, ஜூலை 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஜூன் 7ஆம் தேதி 2021-22க்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com