தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மகாராஷ்டிரத்தில் மேலும் 8,753 பேருக்கு கரோனா தொற்று

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,753 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
மகாராஷ்டிரத்தில் மேலும் 8,753 பேருக்கு கரோனா தொற்று
Updated On :2 ஜூலை 2021, 3:35 pm

DIN

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,753 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 60,79,352 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் 8,385 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 58,36,920 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 156 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 1,22,353 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி மகாராஷ்டிரத்தில் 1,16,876 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.