6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கோவாவில் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டிப்பு

கோவாவில் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :2 ஜூலை 2021, 3:14 pm

DIN

கோவாவில் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். 
கோவாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 183 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,67,103ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் இன்று மேலும் 2 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 3,062ஆக உயர்ந்துள்ளது. 
தற்போதைய நிலவரப்படி 2,174 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாவிலிருந்து இன்று 285 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,61,867ஆக உயர்ந்துள்ளது. 
இந்த நிலையில் கோவாவில் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். மேலும், கடைகள் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். சலூன்கள் மற்றும் வெளிப்புற விளையாட்டு வளாகம் / மைதானங்கள் திறக்கப்படலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.