அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ராஜஸ்தானில் லாரி - கார் நேருக்கு நேர் மோதல்; 5 பேர் பலி; இருவர் படுகாயம்

ராஜஸ்தானில் லாரி மற்றும் கார் மோதியதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் இருவர் காயமடைந்தனர். 

News image
Updated On :5 ஜூலை 2021, 7:47 am

DIN

ராஜஸ்தானில் லாரி மற்றும் கார் மோதியதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் இருவர் காயமடைந்தனர். 

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரின் டங்கியாவாஸ் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு லாரி மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் இருவர் காயமடைந்ததாகவும் அதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

காயமடைந்தவர்கள் இருவரும் ஜோத்பூரில் உள்ள எம்.டி.எம். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதில் லாரியை ஓட்டி வந்தவர் தப்பித்துச் சென்றதால் அவரை போலீஸார் தேடி வருகின்றனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.