மலைப் பிரதேசங்களில் கரோனா கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றவில்லையெனில் தளர்வுகள் திரும்பப் பெறப்படும் என மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
நாட்டில் கரோனா இரண்டாம் அலை குறைந்த போதிலும், மூன்றாம் அலைக்கான எச்சரிக்கை இருப்பதால் அனைத்து மாநிலங்களும் தளர்வுகள் அளிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் மக்கள் நடமாட்டம் இருப்பதாக இன்றைய சுகாதாரத்துறையின் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் கூறியதாவது,
நாட்டில் கரோனாவால் சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை 5 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது. மகாராஷ்டிரம், தமிழ்நாடு, ஒடிசா, ஆந்திர பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் மட்டுமே 10 சதவீதத்திற்கும் அதிகமான பாதிப்பு விகிதம் பதிவாகி வருகிறது.

இன்னும் சில பகுதிகளில் இரண்டாம் அலை குறையவில்லை. மலைப் பிரதேசங்களுக்கு செல்லும் மக்கள் கரோனா நெறிமுறைகளை பின்பற்றுவதில்லை. கரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றவில்லையெனில் தளர்வுகள் திரும்பப் பெறப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஒட்டுமொத்த மத்திய அமைச்சரவையையும் களமிறக்கி பாஜக பிரசாரம் செய்தும் பலனளிக்காது! - மமதா
கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்!

போதிய பேருந்து வசதி இல்லை! 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாக்களிக்க முடியவில்லை! - Nirmal Kumar | TVK

தற்கொலை எண்ணத்தில் இருந்தேன்: ரத்னகுமார்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


